Tuesday, June 5, 2012

ரசிக பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்...

http://www.pichaikaaran.com/2012/06/blog-post.html#comment-form

நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன். எனக்கே இதில் என்ன புதிய பார்வை இருக்கிறது என்று குழப்பம் வருகிறது... ஏற்கனவே நிறைய பேர் இதை நிறைய விதங்களில் எழுதி இருக்கிறார்கள். ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். இந்த கோணத்திற்காக சாருவை கொண்டாட என்ன இருக்கிறது என்று புரியவில்லை.


மேலும், இங்கே நீங்கள் சிலாகித்து பேசி இருக்கும் அவரின் மற்ற கட்டுரைகளிலும் எதிலுமே ஒரு புதிய பார்வை, புதிய கோணம் இருப்பதாக தெரியவில்லை. எல்லாமே ஏற்கனவே பலமுறை பல பேரால் சொல்லப்பட்டதுதான். எழுதப்பட்டதுதான். இதில் சாரு எங்கே வித்தியாசபடுகிறார்? எழுத்துநடை என்று மறுபடி மறுபடி சொல்லவதில் எனக்கு சில தயக்கங்கள் இருக்கிறது.

content இல்லாத ஒரு எழுத்துநடை வெறும் வியாபார தந்திரம் மட்டுமே... புதிய மொந்தையில் பழைய கள் அவ்வளவே... இதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

பாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்...! தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.

நீங்கள் சாருவின் பரம ரசிகனாக இருப்பதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இருக்கமுடியாது. அது உங்கள் உரிமை. என் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்?

சமீபத்திய உதாரணம் காட்டவா...

வழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது?

நான் ஒரு சவால் விடவா?

சாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால், அந்த கதை இதுவரை யாருமே எழுதாத படைப்பாக, தொடாத சிந்தனையாக இருந்துவிட்டால், அவருடைய அத்தனை புத்தகங்களையும் பத்து பத்து பிரதிகள் நான் வாங்கிக் கொள்கிறேன்.

அப்படி நடக்காமல் போனால், ஊரில் இருப்பவர்களை எல்லாம் வைது கொண்டு இருக்காமல் நீங்களும் இருக்கவேண்டும். சாருவையும் அப்படி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்...

நன்றி.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment