Friday, June 8, 2012

காதல்

சுழியில் சிக்கிய


நான்....


நீரின்

மேடு பள்ளங்களில்

மோதி திரும்பும் பொழுதுகளிலும்

நினைவுகளில்

நீதான்...


நீ

என்ன செய்வாய்

என்ற எண்ணம்தான்...


என்னை தழுவிக்கொள்வாயா

காது மடல் வருடுவாயா

கூந்தல் கலைத்து

கன்னம் கடிப்பாயா

மூச்சு முட்டும்போது

முத்தமிட்டு மீட்பாயா


ஆனாலும் நீ...

ஏதாவது செய்தேயாகவேண்டும்


என்னைக் காப்பாற்ற


உயிர்குடிக்கும்

சுழலில் இறங்குவாயா?

உனக்கு நீச்சல் தெரியாதாயிற்றே...


என்னைக் காப்பாற்ற

உனது ஆடை களைந்து

கயிறாக்கி தருவாயா?

உனக்கு மானம் பெரியதாயிற்றே...


என்னைக் காப்பாற்ற

உச்சக் குரலில்

ஊர் கூட்டி அழைப்பாயா?

உனக்கு காட்டிகொடுக்கத் தெரியாதாயிற்றே...


என்ன செய்யப் போகிறாய்...

..............


தோள்தொட்டு உலுக்கி

எனை

எழுப்பினாய்...!

1 comment:

  1. நல்ல கனவு....எழுப்பியது யார்.....?

    ReplyDelete