Wednesday, February 2, 2011

என்ன நினைத்திருப்பார்கள்

வாழ்ந்து பார்க்க ஆசை...

காட்டிக் கொடுக்கப்பட்டபோது
கட்டபொம்மனாக - வெள்ளையன்
தட்டிக் கொடுத்தபோது எட்டப்பனாக
வாழ்ந்து பார்க்க ஆசை...

கொடியை இறக்கும்போது நேருவாக - இந்தியக்
கொடியை ஏற்றும் போது
(மவுன்ட்பேட்டன்) பிரபுவாக
வாழ்ந்து பார்க்க ஆசை...

குலைந்து விழுபவரைக்கண்ட கோட்செவாக -
நெஞ்சில்
குண்டடி வாங்கியபோது காந்தியாக
வாழ்ந்து பார்க்க ஆசை...

இதயத்தில் கோடுகிழித்து - நாட்டை
இரண்டாக பிளந்த போது
எந்தபாகம் எனதென்ற குழப்பத்தில்
வாழ்ந்து பார்க்க ஆசை...

2 comments:

  1. முரண்பாடான சிந்தனை ஆனாலும் அருமை

    ReplyDelete
  2. நினைது பார்க்க மட்டும் முடிந்தவை..

    ReplyDelete