Thursday, August 5, 2010

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

என்மேலேறி
என்னையேற்றி கொன்று சென்ற
புகைவண்டிகளுக்காகத்
தவம்கிடக்கும் தண்டவாளம் நான்....

ஏறி இறங்கிய எண்ணிக்கை
எகிறிப் போனாலும்
வேலைவாய்ப்பு அலுவலகத்தை
விடாது பற்றியிருக்கும்
வாலிபர்கூட்டம் எனது

கூழுக்குத் திருடியவனை
கூண்டுக்கு அனுப்பிவிட்டு
கோடிகள் திருடியவனை
கோட்டைக் கனுப்பும்
கில்லாடிகள் எம்காவலர்...

பார் முழுதும் பார்கள் பார்
தீர்ந்ததா தண்ணீர் பஞ்சம்...?

மீன் கேளாமல்
தூண்டில் கேட்டேன்
புழுவாகிப் போனேன்...!

வந்துவிட்டனர் மறுபடி
வாய் நிறைய வாக்குறுதிகளோடு

(வாய்யா வா....)

மத்திக்கு அனுப்பிவைப்போம்
மனம்நிறைய கனவுகளோடு

(எடுடா அந்த போஸ்டரை )

என்மேலேறி
என்னையேற்றி கொன்று சென்ற
புகைவண்டிகளுக்காகத்
தவம்கிடக்கும் தண்டவாளம் நான்....

1 comment:

  1. புரிகிறது தங்கள் வருத்தம்!

    ReplyDelete