Thursday, August 5, 2010

குழந்தையின் சாய்ஸ்...

வாடா ராஜா வா வா
வட்டமிட்டு சுற்றுமிந்த வண்டிபார் வா
இந்தாடா செல்லம் இங்கே வா
பந்தாடச் சொல்லும் பொம்மைபார் வா

ஹெலிகாப்ட்டர் வேணுமா ஏரோப்லேன் வேணுமா?
எப்போதும் சிரிக்கும் கரடிபொம்மை வேணுமா?
எடுத்துக்கொள் கண்ணே எல்லாம் உனது
ஏங்கியழும் ஏன் உன் மனது?

சொல்ல முடியா கூட்டத்தில்
அள்ள முடியா அளவில்
எல்லாமிருந்த கடையில்
எதுவுமில்லா நிலையில்

'என்ன வேண்டும்'
என்ற கேள்விக்கு
'ம்ம்மா' என்றது
கூட்டத்தில் தொலைந்துபோன
குழந்தை...

1 comment:

  1. குழந்தயின் அழுகை குட கவிதை .....

    ReplyDelete