Wednesday, September 5, 2012

இசையும் அடிவருடிகளும் ( 2 )


http://amudhavan.blogspot.in/2012/07/blog-post_28.html#comment-form

திரு காரிகன்,


// எம் எஸ் வி போல யாரும் இங்கே கிடையாது என்று அமுதவன் சொன்னால் நீங்கள் அவரை அடிவருடி என்று விமர்சிக்கலாம். //

- இதற்கு திரு.அமுதவனுக்கு பதிலளிக்கும்போதே நான் சொல்லிவிட்டேன்.

// எம் எஸ் வி க்கு பிறகுதான் இளையராஜா வருகிறார், இருக்கிறார், இருப்பார். அவரை தாண்டி சொல்லும் மேன்மையான இசைதிறன் இளையராஜாவிடம் இல்லை என்பது அவருக்கே தெரியும் //

- அப்படியா...?

// எப்படி இளையராஜாவுக்கு பின் ரகுமானோ(இதை மட்டும் ஒத்துக்கொள்ள மறுக்க மாட்டீர்கள்) //

- மன்னிக்கவும். நான் யாருக்கு பின்னேயும் யாரையும் இருத்திப பார்ப்பதில்லை... எனக்கு இசை முறைபடிஎல்லாம் தெரியாது. தெரிந்தவரை, எம்.எஸ்.வியின் சப்தம் வேறு, இளையராஜாவின் சப்தம் வேறு, எ.ஆர்.ரஹ்மானின் சப்தம் வேறு. யார் முன்னே யார் பின்னே என்று பார்க்க எனக்கு தேவையே இல்லை. அவரவர் சப்தங்கள் எந்த இடங்களில் என் மனதை வருடுகிறதோ, ஒரு நன்றியை சொல்லிவிட்டு புன்னகைத்துக்கொள்வேன்.

// திரு அமுதவன் எம் எஸ் வி யை கடவுள் அளவுக்கு புகழ்வதாக நீங்கள் சொல்வது ஒரு தேவை இல்லாத விவாதத்திற்கு பாதை போடுகிறது //

- தேவை இல்லாத...? - அப்படியானால் அந்த விவாதத்தை தவிர்த்துவிடுவோம்... :)

// நானும் கூட இளையராஜாவின் சிறந்த பல பாடல்களை இன்றுவரை விரும்பி கேட்பவன்தான்.ஆனால் என்னால் இளையராஜா என்றால் இசை என்றும் அவரே தமிழிசையின் பிதாமகன் என்றும் கண்டிப்பாக பிதற்ற முடியாது //

- மிக உண்மை...

// இணையத்தில் இளையராஜாவை பற்றி எழுதும் பலபேர் சொல்லும் ஒரு cliche ராஜா ராஜாதான் என்பது.பின்னர் அவரின் இசை உயிரை உருக்கும் மனதை என்னமோ செய்யும் என்று வார்த்தைகள் இன்றி குழப்பமாக எழுதவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள்.பொதுவாக அவர்கள் இசையை பற்றிய ஒரு விஸ்தாரமான சிந்தனை கிடையாது. டி சௌந்தர் என்னும் ஒரு மிக அருமையான இசை விமர்சகர் எல்லா இசை அமைப்பாளர்களைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டு வந்து கடைசியில் இளையராஜாவோடு நின்றுவிடுகிறார்.எ ஆர் ரகுமானை காப்பி என்று ஒரே வார்த்தையில் புதைத்து விடுகிறார். இன்னும் ஒரு இளையராஜா அபிமானி(மதிமாறன் என்பவர்) சின்ன சின்ன ஆசை என்ற பாடலை விட மணியே மணிக்குயிலே என்னும் இளையராஜாவின் பாடல் வெகுவாக சிறந்தது என்றும் சின்ன சின்ன ஆசையை விரும்பிய எல்லா காதுகளும் முட்டாள் காதுகள் என்று அடைமொழி இடுகிறார்.இன்னொருவர் இளையராஜாதான் தமிழ் இசையில் பாடலுக்கு முன் இசை பாடலுக்கு இடையே இசை என்று ஒரு புதிய வடிவத்தையே புகுத்தினார் என்று வாய்கூசாமல் மைக் இல்லாமல் கூப்பாடு போடுகிறார்.இவர்களைத்தான் நான் அடிவருடிகள் என்று சொல்கிறேன்.//

- ம்ம்ம்ம்... இளையராஜாவின் ரசிகர்களுடைய ஆர்வக்கோளாறின் காரணமாக அநியாயமாக ராஜாவின் இசை அசிங்கப்படுவது வருத்தமாக இருக்கிறது. கவலையாகவும் இருக்கிறது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

Post a Comment