அறிவை கண்டுபிடித்துவிட்டு
அப்பாவித்தனங்களை தொலைத்திருக்கிறான்
அணுகுண்டுகளை கண்டுபிடித்துவிட்டு
அடக்குமுறை அபத்தமென்கிறான்
சப்தங்களை கண்டுபிடித்துவிட்டு
அமைதியே ஆனந்தமென்கிறான்
வண்ணங்களை கண்டுபிடித்துவிட்டு
கருமையே கடைசியென்கிறான்
கடவுள்களை கண்டுபிடித்துவிட்டு
அன்பே கடவுளென்கிறான்
எண்களையெல்லாம் கண்டுபிடித்துவிட்டு
சூன்யமே சூத்திரமென்கிறான்
பணத்தை கண்டுபிடித்துவிட்டு
பொருளாதாரத்தைத் தேடுகிறான்
வாழுமுறைமட்டும் கண்டுபிடித்திருந்தால்
வேறெதுவுமே வேண்டியிருந்திருக்காதோ....!
வாழுமுறை கண்டுபிடித்திருந்தால் வாழ்ந்திருப்ப்போமே செக்கு இழுக்கும் செக்கு மாடுகளாக நல்ல வேலை அந்த கூட்டத்தில் நாம் சிக்கவில்லை!
ReplyDelete