Wednesday, July 28, 2010

அம்மா...

அம்மா-
என் செல்ல அம்மா

தினம் எனக்கு முத்தம் தந்து
முத்தம் பெறத்துடிக்கும் அம்மா
தினம் எனக்குத் தாலாட்டு பாடி
தூங்கச் செய்யும் அம்மா

விரல் தொட்டு தளிர்நடை நடந்துனை
உள்ளம் விம்மிட வைப்பேன்
உன் கன்னம்தொட்டு எச்சில் முத்தமிட்டு
நெஞ்சம் நனைய வைப்பேன்

கொஞ்சும் மழலை பேசி உன்னை
கொஞ்சம் மயங்க வைப்பேன்.
தஞ்சம் தஞ்சம் என்று உன்னை
எனக்குள் தடுமாற வைப்பேன்

அப்பா அவர் மூலம் இந்த
உலகத்தை நான் அறிவேன்
அம்மா உன் மூலம் இந்த
உலகத்தை நான் அடைவேன்

மனதில் என்றும் உங்களை நிறுத்தி
முதியோர் இல்லம் மறக்கச் செய்வேன்
மகனிவன் என் மகன் என்று
மனம் நெகிழச்...

பாடிக் கொண்டிருந்த குழந்தையின் பாடல்
பாதியில் முடிந்து போனது -
வெற்றிகரமாக முடிந்த
கருச்சிதைவால்....

1 comment:

  1. பதைபதைக்க வைத்தன இறுதி வரிகள்!

    ReplyDelete